search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை முயற்சி"

    • 10-ம் வகுப்பு வரை தன்னுடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
    • தற்போது 2 பேருமே தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொத்தப்பட்டியைச் சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது பள்ளியில் 3-வது மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்தார். அப்போது மரக்கிளையில் சிக்கி கீழே விழுந்ததில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்த மாணவிகள் இதுகுறித்து ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மாணவி 10-ம் வகுப்பு வரை வேறொரு பள்ளியில் படித்துவிட்டு தற்போது மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

    10-ம் வகுப்பு வரை தன்னுடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தற்போது அவரும் வேறொரு பள்ளியில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்த அந்த மாணவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் மனமுடைந்த மாணவி தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து 3-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். தற்போது 2 பேருமே தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றனர்.

    காதலனுக்காக மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன் மனைவி, 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் ஒரு அறையில் கிடந்தனர்.
    • நேசமணி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் தட்டான் விளை பெருமாள் நகரை சேர்ந்தவர் பிரவீன் (வயது 30). இவரது மனைவி ரூபா (28). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

    பிரவீன் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கினார்.

    கடன் கொடுத்தவர்கள் பிரவீனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அவரால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

    இது குறித்து மனைவி ரூபாவிடம் தெரிவித்தார். இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். நேற்று பிரவீன் விஷ மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அதனை இரவில் குழந்தைகளுக்கு கொடுத்தனர்.

    பின்னர் பிரவினும், ரூபாவும் விஷம் குடித்தனர்.விஷம் குடித்த பிறகு பிரவீன் வீட்டிலிருந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கணவன் மனைவி, 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் ஒரு அறையில் கிடந்தனர். இதை பார்த்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரவீன் அவரது மனைவி ரூபா மற்றும் 2 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் அவரது வீட்டில் இருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில் தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

    ஆனால் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் இந்த முடிவை எடுத்துக் கொண்டதாக குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் ஆதரவற்ற முதியோர் மற்றும் வீட்டை விட்டு வெளியேறி வந்த பலர் சாலை ஓரங்களிலும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற இடங்களிலும் தங்கி உள்ளனர்.

    இவர்கள் அன்றாட உணவு தேவைக்காக யாசகம் பெறுவதும், கோவில்களில் சென்று அன்னதானம் பெற்று உண்டும் வாழ்ந்து வருகின்றனர்.

    இதில் பிரேமா (வயது 70) என்ற மூதாட்டி ஆதரவற்ற நிலையில் உடையாப்பட்டி பகுதியிலும், அம்மாப்பேட்டையில் உள்ள மிலிட்டரி ரோடு பகுதியிலும் கடந்த சில நாட்கள் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் திருமணிமுத்தாறு ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியிலும் சுற்றி திரிந்து வந்தார்.

    இந்த நிலையில் வாழ வழியின்றி எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வந்த பிரேமா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, இன்று காலையில் பழைய பஸ் நிலையம் அருகே திருமணிமுத்தாறு ஆட்கொல்லி பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஆனால் திருமணிமுத்தாற்றில் முழங்கால் அளவே தண்ணீர் ஓடுவதால் பக்கவாட்டு சுவற்றில் உருண்டு கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த டவுன் போலீசார் மற்றும் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினர் ஆற்றுக்குள் இறங்கி மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மூதாட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்த போது செல்போனை பறிமுதல் செய்தனர்.
    • அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று விட்டதாக சிறை காவலர்களிடம் எண்ணூர் தனசேகரன் தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறை சாலை உள்ளது. இந்த சிறைசாலையில் 100-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த சிறைசாலையில் 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது அறையில் உதவி ஜெயிலர் மணிகண்டன் திடீரென சோதனை நடத்த சென்றார். அப்போது அவரை எண்ணூர் தனசேகரன் தாக்க முயன்றார்.

    மேலும் ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் பாட்டில்களை வீசி கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்கிலும் எண்ணூர் தனசேகரனுக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தனசேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்த போது செல்போனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதனால் எண்ணூர் தனசேகரனை சிறைக்காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த 7-ந்தேதி தனசேகரன் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக சென்னை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மாலை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    அப்போது சிறைக்காவலர்கள் எண்ணூர் தனசேகரன் அறையை மீண்டும் சோதனை செய்தனர். சோதனையில் அவரது அறையில் செல்போன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறைக்காவலர்கள் அந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று எண்ணூர் தனசேகரன் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று விட்டதாக சிறை காவலர்களிடம் தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறைக் காவலர்கள் அவரை மீட்டு சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உண்மையிலேயே அதிக மாத்திரைகளை தின்றாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மயக்கம் தெளிந்த பின்னர் தான் எதற்காக சாணிப்பவுடரை குடித்தார் என்பது தெரிய வரும்
    • அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஏ.டி. காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் ஜெகநாதன் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜெகநாதன் திடீரென சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.

    சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் என்ன நடந்தது என கேட்டனர். அதற்குள் அவர் மயங்கி னார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஜெயநாதனை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் ஜெகநாதனை டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி சென்றனர்.

    ஆனால் மாணவர் மயக்கமாக இருப்பதால் விசாரணை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக ஜெகநாதன் எதற்காக சாணிப்பவுடரை குடித்தார் என்பது தெரியவில்லை. அவர் மயக்கம் தெளிந்த பின்னர் தான் எதற்காக சாணிப்பவுடரை குடித்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் தியேட்டருக்கு வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35) ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றார். அப்போது அங்குள்ள லிப்டை அவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனை தியேட்டர் நிர்வாகம் சி.சி.டி.வி.கேமரா மூலம் கண்டு பிடித்தனர். மறுநாள் சதீஷ் அதே தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்ற போது தியேட்டர் நிர்வாகத்தினர் சதீஷை கண்டித்தனர். பின்னர் அங்கிருந்து சதீஷ் சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் தியேட்டருக்கு வந்தார்.

    அங்குள்ள பொருட்களை சூறையாடிவிட்டு தியேட்டர் ஊழியர்களை சதீஷ் மிரட்டி விட்டு சென்றார். இது குறித்து புகாரின் பேரில் உருளையபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் சதீஷை பிடிக்க அவரது வீட்டுக்கு போலீசார் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் அடிக்கடி சதீஷை தேடி அவரது வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்ததால் மன உளைச்சல் அடைந்த சதீஷின் மனைவி தீஷ்மா கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலை முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் தொல்லை கொடுத்ததால் ரவுடியின் மனைவி கையை கத்தியால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கருமந்துறை அடுத்த மணியார்குண்டம் பகுதியில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் ஐஸ்வர்யா (18).
    • தொழிற் பயிற்சி மையம் அருகிலுள்ள வேலியில் இருந்த விஷத் தன்மை கொண்ட அரளி விதையைப் பறித்து தின்று தற்கொலைக்கு முயன்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கல்வராயன்மலை கருமந்துறை அடுத்த மணியார்குண்டம் பகுதியில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் இரண்டாமாண்டு படித்து வரும், ஆத்தூர் அடுத்த வீரகனூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா (18) என்பவர், மதிய உணவு இடைவேளை நேரத்தில் தொழிற் பயிற்சி மையம் அருகிலுள்ள வேலியில் இருந்த விஷத் தன்மை கொண்ட அரளி விதையைப் பறித்து தின்று தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த இவரை மீட்டு விடுதி காப்பாளர் சிகிச்சைக்காக பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த மாணவி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டது.
    • தற்கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவரது மனைவி நித்யா (23) இவர்களுக்கு சசிபிரியா (9) அஸ்விதாஸ்ரீ (8) மோகனா (5) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக நித்யா அரளி விதைகளை அரைத்து குளிர்பானத்தில் தனது 3 குழந்தைகளுக்கும் கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதுபற்றி தெரியவந்ததும் 4 பேரையும் மீட்டு அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக நித்யா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை காதலித்து வருகிறார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.

    வாணியம்பாடி:

    தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). கடந்த 2021-ம் ஆண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தார்.

    கடந்த 7 மாதமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை காதலித்து வருகிறார்.

    இவர்களது காதலுக்கு ராஜ்குமாரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு ராஜ்குமார் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார்.

    அப்போது இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் பணியில் இருந்தனர். வழக்கு சம்பந்தமாக அனைவருமே வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு அவரது காதலியான பெண் சப்-இன்ஸ்பெக்டர் போன் செய்தார். ராஜ்குமார் போலீஸ் நிலையத்திற்கு வெளியே சென்று வீடியோ கால் மூலமாக போனில் பேசினார். நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டே இருந்தார்.

    திடீரென அவருக்கும் போனில் பேசிய காதலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ராஜ்குமார் ஆவேசமடைந்தார். போனில் கோபமாக பேசியபடி போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தார்.

    அவரது இருக்கை அமைந்துள்ள சப்-இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்று கதவை வேகமாக பூட்டினார். ஆவேசமாக பேசி சென்றதால் பயந்து போன அவரது காதலியான பெண் சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்திற்கு போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

    இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சென்று அறை கதவை திறக்கும்படி வெளியில் இருந்து கூறினர்.

    ஆனால் உள்ளே இருந்த ராஜ்குமார் ஒரு நீளமான துண்டை எடுத்து மின்விசிறியில் கட்டி தனது கழுத்தில் மாட்டினார்.

    அவர் நீண்ட நேரமாக கதவை திறக்காதால் போலீசார் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    மின்விசிறியில் தூக்கில் தொங்க முயன்ற ராஜ்குமாரை மீட்டனர். மேலும் இது குறித்து டி.எஸ்.பி. விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.

    மேலும் ஒரு மணி நேரம் ராஜ்குமாருக்கு போலீசார் தற்கொலை செய்யக்கூடாது என்பது குறித்து கவுன்சிலிங் அளித்தனர்.

    காதல் தகராறில் ராஜ்குமார் தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர் அவர்களிடம் நேரடியாக ஒப்படைக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செல்வராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சாந்தியிடம் தகராறு செய்து அவரை தாக்கி வந்துள்ளார்.
    • 2 குடிசை வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு, தானும் அதன் உள்ளே நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    பரமத்திவேலூர், ஆக.21-

    நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள சேந்தமங்கலம் ஆர்.பி.புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற மணி (60). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி.

    இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். செல்வராஜ் மனைவி சாந்தி, தாய் பெரியம்மாவுடன் சேந்தமங்கலத்தில் வசித்து வந்தார்.

    குடித்துவிட்டு தகராறு

    இந்நிலையில் செல்வராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சாந்தியிடம் தகராறு செய்து அவரை தாக்கி வந்துள்ளார். இதனால் செல்வராஜின் தொந்தரவு தாங்க முடியாமல் சாந்தி கோபித்துக் கொண்டு வேலகவுண்டம்பட்டி அருகே பெருக்கம்பாளையத்தில் உள்ள மூத்த மகள் முத்துலட்சுமியின் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்று விட்டார்.

    இதனால் செல்வராஜ் மூத்த மகள் வீட்டிற்கு சென்று மனைவியை அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து சாந்தி அங்கிருந்து சேலத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.

    மகள் வீட்டில் மனைவி இல்லாததால் சாந்தி எங்கே இருக்கிறார் எனக்கேட்டு மகள் முத்துலட்சுமியிடம் செல்வராஜ் பிரச்சனை செய்துள்ளார்.

    குடிசைக்கு தீ வைப்பு

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பெருக்கம்பாளையம் வந்த செல்வராஜ் தனது மகளுக்கு சொந்தமான பூட்டி வைக்கப்பட்டிருந்த 2 குடிசை வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு, தானும் அதன் உள்ளே நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 45 சதவீத தீக்காயத்துடன் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டன்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியை ‘ராகிங்’ செய்த மற்றொரு மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கல்லூரியில் ‘ராகிங்’ கொடுமையால் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் படித்து வந்த கல்லூரியில் நேற்று சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதையடுத்து வினாடி-வினா போட்டி நடந்தது. அப்போது அந்த மாணவி அவருடன் படிக்கும் சக நண்பருடன் பேச முயன்றுள்ளார். ஆனால் அவரது நண்பர் பேசாமல் சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த மாணவியின் தோழிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் மாணவி மனவருத்தம் அடைந்தார். உடனே அந்த மாணவி அங்கிருந்து சென்றார்.

    கல்லூரியில் உள்ள கட்டிடத்தின் மாடி தடுப்புச்சுவரில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த சக மாணவிகள் படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். இது தொடர்பாக மாணவியின் தாயார் நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    முதல்கட்ட விசாரணை யில் 'ராகிங்' கொடுமை காரணமாக மாணவி மாடியிலிருந்து குதித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவியை 'ராகிங்' செய்த மற்றொரு மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்லூரியில் 'ராகிங்' கொடுமையால் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சவரியார் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனைவிக்கு ஆதரவாக வக்கீல் கலீல் ரகுமான் செயல்பட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது,

    இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே ஆரோக்கிய ராஜை கைது செய்ய வலியுறுத்தி இரு தினங்களுக்க முன்தினம் வக்கீல்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக கூறியதன் பேரில் போரட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் ஆரோக்கிய ராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என மீண்டும் வக்கீல்கள் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு முன்பாக வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    மேலும் அலட்சிய போக்கில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே திருக்கோகர்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து ள்ளனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    வக்கீல்கள் போராட்டத்தால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×